புதுக்கோட்டை: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே புதுக்குளம் அமைந்துள்ளது. சம்பவத்தன்று இரவு இப்பகுதியில் கடைக்கு 15 வயது சிறுமி நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியில் இருந்த 3 வாலிபர்கள், சிறுமியின் கையை பிடித்து இழுத்து, குளக்கரை பகுதிக்கு அழைத்து செல்ல முயன்றுள்ளனர். அந்த சிறுமி அவர்களின் பிடியில் இருந்து நழுவ முயற்சித்த போது, 3 பேரில் ஒருவர், சிறுமியை கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுமி சாலையில் மயங்கி விழுந்தாள். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த 3 பேரும் தப்பியோடினர். சிறுமியை மீட்டு வீட்டில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமியை பலாத்காரம் செய்ய வாலிபர்கள் முயற்சித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் காந்திநகரை சேர்ந்த கார்த்திக் என்கிற வேல்முருகன் (27), விஜய் (27), ராமகிருஷ்ணன் (28) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 வாலிபர்களையும் கைது செய்தனர். கைதான 3 பேரையும் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி அறந்தாங்கி சிறையில் அடைத்தனர். 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- Advertisement -
Latest article
நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்!
நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார்.
1) நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால், தன்னலமற்ற அன்பான சர்வாதிகார ஆட்சி நடத்தப்படும்.
2) தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி...
திமுக தலைமையகத்தில் வாய்ப்பு கோரும் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன்: பாரம்பரிய பின்னணி மற்றும் மக்கள் சேவையால் புதுக்கோட்டையில் ஆதரவாளர்கள் மத்தியில்...
திமுக தலைமையகத்தில் வாய்ப்பு கோரும் டாக்டர் மு.க.முத்துக்கருப்பன்: பாரம்பரிய பின்னணி மற்றும் மக்கள் சேவையால் புதுக்கோட்டையில் பலமான எதிர்பார்ப்பு
புதுக்கோட்டை: 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் திமுக சார்பில்...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு...
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு செலவின பட்டியல் வெளியீடு.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த வேட்பாளர்களின் உணவு செலவின பட்டியல் வெளியீடு.
அதன்படி:
காபி...















