புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உருவாக்கப்பட்ட வலுவான சுகாதார கட்டமைப்பால்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் ஆர்.டி. பி.சி.ஆர். மூலம் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வரும் ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் 2 ஆயிரம் மினி கிளினிக் மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவை விரைவில் செயல்பாட்டுக்கு வந்து விடும். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி வரும் வரை முகக்கவசத்தை கட்டாயம் பொதுமக்கள் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளுடன் மலேரியா, டெங்கு போன்ற மழைக்கால நோய் பரவல் தடுப்பு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். கொரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக வசூலித்த 4 தனியார் மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட் டுகள் மேலும் வந்தால் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- Advertisement -
Latest article
“சொன்னதைச் செய்யும் அரசு… பம்பரமாகச் சுழலும் அமைச்சர்!” – புதுக்கோட்டையில் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்களின் அதிரடி...
"சொன்னதைச் செய்யும் அரசு… பம்பரமாகச் சுழலும் அமைச்சர்!" – புதுக்கோட்டையில் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்களின் அதிரடி ஆய்வுகளால் நெகிழும் மக்கள்!
தமிழக முதல்வர் மாண்புமிகு விஜய் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், அவரின் "சொல்லுக்கு...
புதுக்கோட்டை அஇஅதிமுகவில் பரபரப்பு: அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ‘SAS சேட்’ அதிரடி அறிவிப்பு!
புதுக்கோட்டை அஇஅதிமுகவில் பரபரப்பு: அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ‘SAS சேட்’ அதிரடி அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்ட அஇஅதிமுக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, அக்கட்சியின் மாநகர கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் தீவிர...
தமிழகத்தின் மிகச்சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் கலைமாமணி விருது பெற்றவருமான முத்துக்கூத்தன் கலைவாணன் (68) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில்...
தமிழகத்தின் மிகச்சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் கலைமாமணி விருது பெற்றவருமான முத்துக்கூத்தன் கலைவாணன் (68) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் நேற்று காலமானார். புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தனின் மகனான இவர், அண்மைக்காலமாகப்...















