தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள இலட்சுமி நகர் 2 ஆம் தெருவை சார்ந்தவர் லாரன்ஸ் (வயது 64). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பாத்திமா மேரி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஜான் எட்வேர்ட் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இரண்டு மகன்களும், கிளைமா என்ற மகளும் இருக்கிறார். இவர்கள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. லாரன்ஸ் – மேரி தம்பதி மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பாத்திமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த லாரன்ஸ் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். மனைவியின் இறப்பை தாங்க இயலாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரின் உடல் வந்துள்ளது. இதனை கண்டு இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளான லாரன்ஸ் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், 44 வருடங்கள் இணைபிரியாது வாழ்ந்து வந்த தம்பதி, மறைவிலும் இணை பிரியாது இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. news now tamilnadu
- Advertisement -
Latest article
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21ஆம்...
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தின்...
புதுக்கோட்டை ரோட்டரி சங்க 74ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! எஸ். வி. எஸ் ஜெயக்குமார் மற்றும்...
தலைவராக P. செல்லத்துரை, செயலாளராக N. வினோத்குமார், பொருளாளராக மருத்துவர் K. ஆறுமுகம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்..
புதிய நிர்வாகிகளை சந்தித்த ரோட்டரியன் எஸ். வி. எஸ். ஜெயக்குமார், துணை ஆளுநர் ரோட்டரியன்...
தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ________________
தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ________________
தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து, 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) ஒரே...














