தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள இலட்சுமி நகர் 2 ஆம் தெருவை சார்ந்தவர் லாரன்ஸ் (வயது 64). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பாத்திமா மேரி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஜான் எட்வேர்ட் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இரண்டு மகன்களும், கிளைமா என்ற மகளும் இருக்கிறார். இவர்கள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. லாரன்ஸ் – மேரி தம்பதி மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பாத்திமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த லாரன்ஸ் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். மனைவியின் இறப்பை தாங்க இயலாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரின் உடல் வந்துள்ளது. இதனை கண்டு இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளான லாரன்ஸ் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், 44 வருடங்கள் இணைபிரியாது வாழ்ந்து வந்த தம்பதி, மறைவிலும் இணை பிரியாது இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. news now tamilnadu
- Advertisement -
Latest article
சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருணை அதிரடியாக இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருணை அதிரடியாக இடமாற்றம் செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய...
13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை! வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக...
13ம் புதுக்கோட்டைக்கு வருகை தரும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை!
வரும் 13ஆம் தேதி தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி NDA கூட்டணி கட்சிபாஜக வேட்பாளர்N....
காரைக்குடி பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசவில்லை; 2:30 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை...
காரைக்குடி பிரசாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பேசவில்லை; 2:30 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும் என காவல்துறை நிபந்தனை விதித்திருந்த நிலையில், நேரம் அதிகமானதால் திருச்சி புறப்பட்டார்!















