புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் சார்பாக இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை ஏஎன்எஸ் பிரைடு ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தின் தலைவர் பொறியாளர் பெர்லின் தாமஸ் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார், ரோட்டரி மாவட்டம் 3000த்தின் ஆளுநர் டாக்டர். ஜெயக்கண் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு இஸ்லாத்தின் பெருமைகளை கூறி அனைவரையும் வாழ்த்தி பேசினார்..
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் கருப்பசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் தமிழ்ச்செம்மல் கவிஞர். தங்கம்மூர்த்தி, டிஇஎல்சி தேவாலயத்தின் கௌரவ சபைகுரு மறைதிரு. பால் ஜேக்கப் ஜெயக்குமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு நோன்பு நோற்றுவரும் இஸ்லாமிய சகோதரர்களை வாழ்த்தி பேசினார்கள்.
ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் அந்தோணிசாமி, ரோட்டரி துணை ஆளுநர் சிவாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
புதுக்கோட்டை ஹிக்மத்துல் பாலிகா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவி அல்ஹாபிழ் அல்ஹாஜ். அப்துல் ஜப்பார் பாகவி இஃப்தார் உரையாற்றி நோன்பு துறப்பு நிகழ்வை நடத்திக்கொடுத்தார்.
இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர்கள் பொறியாளர் பஷீர் முகமது, சிட்டி வாக் அக்பர் அலி, மருத்துவர். அகமது மர்சூக், நிஜாம் லீஃப் பக்ருதீன் அலி, சிங்கப்பூர் எலக்ட்ரிக்கல்ஸ் காஜா மைதீன், தாரகை மென்ஸ்வியர் முகமது தாரிக் ஆகியோர் உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிறைவில் சங்கத்தின் செயலாளர் பொறியாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.