புதுக்கோட்டை அருகே கஜா புயலில் சேதமடைந்த பேருந்து நிறுத்த நிழற்குடை இன்னும் சீர் செய்யப்படவில்லை! உடனடியாக புனரமைப்பு பணிகள் செய்ய அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

574

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கிழக்கு ஊராட்சியில் மதுரை சாலையில் குமரன் நகர் பேருந்து நிறுத்தம் நிழற்குடை உள்ளது..

இந்த பேருந்து நிலைய நிழற்குடை கடந்த கஜா புயல் போது பெருத்த சேதம் அடைந்தது..

ஆனால் தற்போது வரை இந்த பேருந்து நிறுத்தத்தை புனரமைப்பு பணிகள் ஏதும் செய்யவில்லை..

சேதமடைந்த குமரன் நகர் பேருந்து நிறுத்தம் நிழற்குடை

ஆகவே உடனடியாக புனரமைப்பு செய்து பேருந்து நிறுத்த நிழற்குடையைசரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here