தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள இலட்சுமி நகர் 2 ஆம் தெருவை சார்ந்தவர் லாரன்ஸ் (வயது 64). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பாத்திமா மேரி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஜான் எட்வேர்ட் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இரண்டு மகன்களும், கிளைமா என்ற மகளும் இருக்கிறார். இவர்கள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. லாரன்ஸ் – மேரி தம்பதி மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பாத்திமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த லாரன்ஸ் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். மனைவியின் இறப்பை தாங்க இயலாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரின் உடல் வந்துள்ளது. இதனை கண்டு இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளான லாரன்ஸ் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், 44 வருடங்கள் இணைபிரியாது வாழ்ந்து வந்த தம்பதி, மறைவிலும் இணை பிரியாது இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. news now tamilnadu
- Advertisement -
Latest article
புதுக்கோட்டை சட்டமன்ற திமுக சீட் ரேஸில் முன்னிலையில் உள்ளவர்கள்!
புதுக்கோட்டை சட்டமன்ற திமுக சீட் ரேஸில் முன்னிலையில் உள்ளவர்கள்:
தென் தமிழகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உற்றுபார்க்க வேண்டிய முக்கியமான தொகுதி யாகும்..
இத்தகைய சூழலில் திமுக சார்பில் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 6 பெயர்கள்...
ஒலிம்பியன்ஸ் குளோபல் ரெக்கார்ட் லோகோவை முதல்வர் என். ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்
ஒலிம்பியன்ஸ் குளோபல் ரெக்கார்ட்"லோகோவை
புதுச்சேரி முதல்வர்என். ரங்கசாமி அறிமுகப்படுத்தினார்
காரைக்குடி, மார்ச் 11-ஒலிம்பியன்ஸ் குளோபல் ரெக்கார்ட்ஸ் லோகோ அறிமுக விழாபுதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமி இல்லத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்வர்லோகோவை அறிமுகப்படுத்திநிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியில்ஒலிம்பியன்ஸ்...
ஒரு கோடி பு ! புதுக்கோட்டை மாநகராட்சிக்கு அனுமதிக்காக ஓரு கோடி ரூபாய் அளித்தததாக கூறும் ஏர்டெல் பைபர்...
1 கோடி ருபாய் குடுத்து யாரிடம் அனுமதி வாங்கினார்கள்..???
புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார்நகரில் ஏர்டெல் க்காக துளை போடுவதை தடுத்து நிறுத்தப்பட்டது
மாநகராட்சியில் அனுமதி பெற்றதாக கூறி ஏர்டெல் பைபர் போடும் ஒப்பந்ததாரர்கள் அவர்களது இஷ்டத்திற்கு...















