தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் உள்ள இலட்சுமி நகர் 2 ஆம் தெருவை சார்ந்தவர் லாரன்ஸ் (வயது 64). இவர் பொதுப்பணித்துறையில் ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், இவரது மனைவி பாத்திமா மேரி (வயது 60). இவர்கள் இருவருக்கும் ஜான் எட்வேர்ட் மற்றும் ஸ்டீபன் ராஜ் ஆகிய இரண்டு மகன்களும், கிளைமா என்ற மகளும் இருக்கிறார். இவர்கள் அனைவருக்குமே திருமணம் முடிந்துவிட்டது. லாரன்ஸ் – மேரி தம்பதி மகன்களுடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 8 ஆம் தேதியன்று பாத்திமாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அறிந்த லாரன்ஸ் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். மனைவியின் இறப்பை தாங்க இயலாமல் இருந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அவரின் உடல் வந்துள்ளது. இதனை கண்டு இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளான லாரன்ஸ் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்து பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும், 44 வருடங்கள் இணைபிரியாது வாழ்ந்து வந்த தம்பதி, மறைவிலும் இணை பிரியாது இருந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. news now tamilnadu
- Advertisement -
Latest article
தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம். வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!
தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம்!
வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!
2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு...
மதுரைக்கு மல்லிகைப்பூ, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பது போல புதுக்கோட்டைக்கு மணல் கொள்ளையா? துணை போகும் அரசு...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை, புனங்குளம், அரியானிப்பட்டி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக 20 ஏக்கருக்கு மேலாக 50 அடி ஆழத்தில் பட்டப் பகலிலேயே கனிமவள கொள்ளை - கண்டுகொள்ளாத அதிகாரிகள் - நடவடிக்கை எடுக்க...
விராலிமலை அருகே நடந்த விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்!
விராலிமலை, ஜன-02
விராலிமலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதல் 15 தொழிலாளர்கள் காயம்
டாக்டர் பற்றாக்குறை என்றால் என்ன நானும் ஒரு மருத்துவர் தான் என்று கூறிக்கொண்டு விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி...















