♦ 35 ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன்.
♦ முறையாக வருடா வருடம் வருமான வரி செலுத்தி வருகிறேன்.
♦ சென்னையில் உள்ள வீடு சொந்த வீடு அல்ல வாடகை வீடு.
♦ என்னை சார்ந்த யாருடைய வங்கி கணக்குகளையும் அரசு அதிகாரிகள் முடக்கவில்லை.
♦ அமைச்சராக இருந்த காலத்தில் புதிதாக எந்த தொழிலும் தொடங்கவில்லை.
♦ தவறாக தகவல்கள் தெரிவித்த மீடியாக்கள் மீது வழக்கறிஞர்கள் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளேன்.
♦ முற்றிலும் அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கை.
♦ லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு ரைடு மூலம் என்னையும் கரூர் அதிமுகவையும் முடக்க சதி.
♦ 25 லட்ச ரூபாயை ஒரே இடத்தில் கைப்பற்ற வில்லை, பல இடங்களில் ஒரு லட்சம் 3 இலட்சம் என சிறு சிறு தொகையாக எடுத்துள்ளனர்.
♦ அவை அனைத்தும் அந்தந்த நிறுவனத்தின் தினசரி வரவு செலவு கணக்கிற்காக வைக்கப்பட்டிருந்த தொகை. அதற்கான ஆதாரங்களை அன்றே அதிகாரிகளிடம் கொடுத்துள்ளேன்.
♦ சட்ட ரீதியாக வழக்கை சந்திப்பேன்.