தமிழகத்தின் மிகச்சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் கலைமாமணி விருது பெற்றவருமான முத்துக்கூத்தன் கலைவாணன் (68) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் நேற்று காலமானார். புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தனின் மகனான இவர், அண்மைக்காலமாகப் புற்றுநோய் பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டத்தின் வழியே அறிவியல் பகுத்தறிவுக் கருத்துகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தமிழ் மரபின் பெருமைகளைத் தனது தனித்துவமான பாணியில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த இவர், இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பொம்மலாட்ட நிகழ்சிகளை நடத்தியுள்ளார். சென்னை பொதிகை தொலைக்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், மக்கள் தொலைக்காட்சியில் “கலை மாமா” என்ற தலைப்பில் 90-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்த் தொலைக்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கிப் புகழ்பெற்ற இவர், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காகப் பல நூறு பயிற்சி வகுப்புகளையும் நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, மூன்று திரைப்படங்கள் மற்றும் இரண்டு மெகா தொடர்களில் நடிகராக முகம் காட்டியுள்ள கலைவாணன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்துத் தனது பொம்மலாட்டக் கலை மூலம் சர்வதேச அளவில் தமிழ் மரபை நிலைநிறுத்திய பெருமைக்குரியவர் ஆவார்.
Home சுற்றுச்சூழல் தமிழகத்தின் மிகச்சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் கலைமாமணி விருது பெற்றவருமான முத்துக்கூத்தன் கலைவாணன் (68) உடல்நலக் குறைவு...
- Advertisement -
Latest article
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது-திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாற்றம் ஏமாற்றமாக மாறி இருக்கிறது.
லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்தி கொண்டு இருக்கிறது.
வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு...
கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன்
கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒவ்வொரு அமைச்சரா சிக்குவாங்க.. உதயநிதி ஹின்ட்.. திமுக ஆக்ஷன்
சட்டமன்ற தேர்தல் முடிந்தும் தமிழக அரசியலில் பரபரப்பு ஓயவில்லை. அரசியல் கட்சிகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. திமுக வழக்கறிஞரணி...
கந்தர்வகோட்டை அடுத்த மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!
மெய்க்குடிப்பட்டியில் 10-ஆம் நூற்றாண்டு சமண தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுப்பு!
புதுக்கோட்டை:ஆக17புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டம், மெய்க்குடிப்பட்டி கிராமத்தில் உள்ள பெரிய ஏரி அருகே, 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான சமண தீர்த்தங்கரர் சிற்பம் தொல்லியல்...















