சென்னை: இந்தியா முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து இன்று வழங்கப்பட உள்ளது. இதேபோல் பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக பஸ், ரெயில் மற்றும் விமான நிலையங்கள், சோதனைச்சாவடிகளிலும், போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மலை கிராமங்கள் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்காக நடமாடும் சொட்டு மருந்து குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலியோ சொட்டு மருந்து வழங்குமாறு தனியார் மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்களுக்கும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் தமிழகத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட 70.20 லட்சம் குழந்தைகளுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை 5 வயதிற்கு உட்பட்ட சுமார் 6.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,644 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 6 ஆயிரத்து 700 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு கண்டிப்பாக போலியோ சொட்டு மருந்து போட வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்
- Advertisement -
Latest article
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21ஆம்...
கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் அரசுப் பணி நியமனங்கள் அனைத்தும் தற்காலிகமானவை மட்டுமே என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தின்...
புதுக்கோட்டை ரோட்டரி சங்க 74ம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா! எஸ். வி. எஸ் ஜெயக்குமார் மற்றும்...
தலைவராக P. செல்லத்துரை, செயலாளராக N. வினோத்குமார், பொருளாளராக மருத்துவர் K. ஆறுமுகம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்..
புதிய நிர்வாகிகளை சந்தித்த ரோட்டரியன் எஸ். வி. எஸ். ஜெயக்குமார், துணை ஆளுநர் ரோட்டரியன்...
தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ________________
தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ________________
தமிழக முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களை குறிவைத்து, 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) ஒரே...















