தேனி: காதலனின் கழுத்தை நெரித்து இளம்பெண் கொன்று தீ வைத்து எரித்தும் விட்டார்.. ஆனால், இந்த இப்படி ஒரு கொடூர கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுகொடுத்ததே, அந்த பெண்ணின் சொந்த அக்கா, வித்யா என்பவராம்.. இந்த சம்பவத்தினால் தேனியே ஆடிப் போய் கிடக்கிறது..! தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலத்தில் இருந்து வைகைபுதூர் செல்லும் சாலையில், பாலூத்து என்ற இடம் உள்ளது.. இங்குள்ள ஒரு புதரில் கடந்த 21-ந்தேதி ஒரு ஆண் பிணம் கிடந்தது… அது எரிந்த நிலையில் கிடந்தது. உடனடியாக தகவல் அறிந்த ஜெயமங்கலம் போலீசாரும் அந்த சடலத்தை மீட்டனர்.. எப்படியோ கொலை செய்யப்பட்டு 2 , 3 நாள் ஆன மாதிரி தெரிந்தது.. இறந்து போனது திண்டுக்கல் மாவட்டம் விருவீடு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பது தெரியவந்துது.. இவருக்கு 29 வயதாகிறது. இந்த ஆனந்தராஜ் தான் காணாமல் போய்விட்டார் என்று கடந்த கடந்த 15-ந்தேதி விருவீடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.. பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் கொலை செய்யப்பட்டுதான் இறந்திருக்கிறார் என்பது உறுதியானது. ஆனால், யார் கொன்றார்கள்? எதற்காக கொன்றார்கள்? சொந்த ஊர் எங்கோ இருக்க, இந்த ஊருக்கு இவர் ஏன் வந்தார்? என்ற கேள்விகளும் எழுந்தன.. இதற்காகவே 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அப்போதுதான், ஆனந்தராஜ் வடுகபட்டியை சேர்ந்த விஜயகாந்தியை லவ் பண்ணிகொண்டிருந்தார் என்பதும், காதலியை பார்ப்பதற்காகவே இந்த ஊருக்கு வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் விஜயசாந்தியை தேட ஆரம்பித்தனர்.. இறுதியில் விறுவீடுவில் உறவினர் பிரபாகரனுடன் விஜயசாந்தி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.. அவரை விரட்டி பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது விஜயசாந்தி சொன்னதாவது: “நான் ஆனந்தராஜை உயிருக்குயிராக காதலித்தேன்.. ஆனால் அவர் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.. ஆனந்தராஜுக்கு வேறு இடத்தில் பெண் பார்த்து நிச்சயம் செய்துவிட்டனர்.. நான் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பிரபாகரனை அழைத்துகொண்டு, ஆனந்தராஜிடம் நியாயம் கேட்டேன்.. அப்போது எங்களுக்குள் தகராறு வரவும், ஆத்திரத்தில் நாங்கள் இருவரும் ஆனந்தராஜை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டோம்.. அந்த சடலத்தின் மீதும் பெட்ரோல் ஊற்றியும் எரித்து விட்டோம். பிறகு, திண்டுக்கல்லில் ஆசைப்பாண்டி என்பவர் வீட்டில் நாங்கள் தலைமறைவாக இருந்தோம்.. இந்த கொலைக்கு பிளான் போட்டு கொடுத்ததே என் அக்கா வித்யா தான்” என்றார். இதையடுத்து, விஜயசாந்தி, வித்யா, ஆசைப்பாண்டி, பிரபாகரன் என 4 பேரையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்துள்ளனர்.
- Advertisement -
Latest article
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்...
வழக்கின் பின்னணி: 'வேலைக்கு லஞ்சம்' புகார்அமைச்சர் கே.என். நேருவின் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 காலிப் பணியிடங்களை நிரப்புவதில் ரூ. 634 கோடி ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை (ED) குற்றம்...
விதிகளை மீறி செயல்படும் குவாரிகளால் நாசமான (மோசமான) புதுக்கோட்டை! விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி...
விஸ்வரூபம் எடுக்கும் கந்தவர்கோட்டை சட்டமன்ற தொகுதி விதிமுறைகளை மீறி செயல்படும் குவாரிகள். பிரச்சனை!
தூங்கும் மாவட்ட நிர்வாகம்…
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா குளவாய்ப்பட்டியில்குவாரிக்கான கலந்தாய்வு கூட்டத்தை அரசு நடத்த முன்வராத நிலையில் அப்பகுதி மக்களே...
வேலைவாய்ப்பை தரும் பட்ஜெட்..நிர்மலா சீதாராமன்!
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பட்ஜெட்டை உருவாக்கி இருக்கிறோம்.
உற்பத்தியை உயர்த்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
-மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை.
மத்திய பட்ஜெட் 2026-27 - தாக்கல்...














