புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கப்பட்டது!

605

தமிழக முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அரசு விதித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.. இருப்பினும் பொதுமக்கள் முககவசம் அணியாமல் பலர் வளம் வருகின்றனர்..

இந்த நிலையில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவசமாக 5000 முகவசம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழங்கப்பட்டது..இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் பெர்லின் தாமஸ், செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் கதிரேசன் துணை ஆளுநர் சிவாஜி, சிறப்பு அழைப்பாளராகக் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார் கலந்து கொண்டனர் மேலும் முன்னாள் ரோட்டரியன்கள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..