புதுக்கோட்டை: கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்தும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு பிறகு தமிழக அரசு தளர்வுகள் அறிவித்து கோவில்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலத்திற்கு முன்பு வரை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. பழனி தண்டாயுதபாணி கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்களில் 24 மணி நேர அன்னதானமும் நடைபெற்று வந்தது. இவை அனைத்தையும் கொரோனா ஊரடங்கு தகர்த்துவிட்டது. தற்போது கோவில்கள் திறக்கப்பட்ட போதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அன்னதான திட்டம் தொடங்குவதில் காலதாமதம் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் புதுக்கோட்டையில் உள்ள கோவிலில் பக்தர்களுக்கான அன்னதானம் பார்சலில் வழங்கப்படுகிறது. நகர் பகுதியில் உள்ள சாந்தநாத சுவாமி கோவில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நேற்று முன்தினம் முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவுக்கு முன்பு இந்த கோவிலில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தர்களை அமர வைத்து இலை போட்டு அன்னதானம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கலவை சாதம் பொட்டலங்களாக தயார் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. தயிர் சாதம், லெமன் சாதம், தக்காளி சாதம் மற்றும் அதனுடன் ஊறுகாய் பாக்கெட்டும் இணைத்து கொடுக்கப்படுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் உணவு தயார் செய்யும் ஊழியர்கள் மதிய அன்னதானமாக இதனை பார்சலில் கட்டி பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையாக நின்று வாங்கி செல்வதோடு, இதற்கான நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்.
- Advertisement -
Latest article
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தரும் முதல்வர் மாவட்ட தலைநகரில் இல்லாமல் கீரனூரில் ஏன்...
புதுக்கோட்டை மாநகர பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி?
சந்தேகிக்கிறது..
புதுக்கோட்டை க்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்டங்களை வழங்க வருகை ஏன் புதுக்கோட்டை மாவட்டம் மாநகராட்சி பகுதிகளில் ஏற்பாடு செய்யா கீரனூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது?
புதுக்கோட்டை...
சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் (CUJ) சார்பில் பொதுகுழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது!
9.11.2025 திருச்சி தனியார் ஓட்டலில் சென்னை பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் சார்பில் காலை 11 மணி அளவில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் நலன் குறித்து தமிழக அரசிடம் 17 கோரிக்கைகள்...
தவெக-வின் தீர்மானங்கள்!
தவெக-வின் தீர்மானங்கள்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு இரங்கல் தீர்மானம்
பெண்கள் பாதுகாப்பு தீர்மானம்,கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்குஅரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு உச்சபட்ச தண்டனையை பெற்றுத் தர...















