Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை அருகே, ஒரு மாத காலமாக நேரடி கொள்முதல் நிலையம் இயங்காமல், 500க்கும் மேற்பட்ட நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளதால், விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கிடாரம்பட்டியில் ஒன்றரை ஆண்டுக்கு முன், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது, மாவட்டத்தில் கோடை சாகுபடி செய்த விவசாயிகள், விளைந்த நெல்லை அறுவடை செய்து, கிடாரம்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது, நெல்லை கொள்முதல் செய்யவில்லை.

இதனால், 15 நாட்களாக, 500 மூடைகளுக்கு மேற்பட்ட நெல்மணிகள் கொள்முதல் செய்யப்படாமல், வெட்ட வெளியில் தேங்கிக் கிடக்கிறது. மழை பெய்தால், இவை நனைந்து வீணாகும் அபாயம் உள்ளது. இதனால், விவசாயிகள் கவலையில் உள்ளனர். ‘நெல் கொள்முதல் நிலையத்தை, விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version