Site icon News now Tamilnadu

புதுக்கோட்டை அருகே ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள்..

புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கவிநாடு கீழ வட்டம் பகுதிகளில் காமராஜர் நகர், அழகர் நகர், தங்கம் நகர், அபிராமி நகர் செல்லும் சாலை வசதிகள் இல்லாத நிலையில் பெரும் அவல நிலையால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்..

மேலும் அப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லை, தண்ணீர் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் கொசு தொல்லை என தவித்து வரும் அப்பகுதி மக்கள்..

துறைசார்ந்த அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

Exit mobile version