புதுக்கோட்டை, இன்று(சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி ஆகும். வழக்கமாக பொது இடங்களில் போலீசார் அனுமதியுடன் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர், மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் தேதியில் அந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மாறாக, அவரவர் வீடுகளில் சிலைகளை வைத்து வழிபட அறிவுறுத்தி உள்ளது. தமிழக அரசின் தடை உத்தரவை தொடர்ந்து எங்காவது விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக என்று அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். சிலைகள் அகற்றம் இந்தநிலையில், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி புதுக்கோட்டை அன்னச்சத்திரம் பகுதிக்கு சென்றபோது அங்கு சிறுவர்கள் சிலர், கொட்டகை அமைத்து அதில் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்திருந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் மற்றும் போலீசார் அங்கிருந்த சிறுவர்களை எச்சரிக்கை செய்ததோடு, விநாயகர் சிலையை அகற்றி எடுத்து சென்றனர்.
- Advertisement -
Latest article
சாத்தான்குளம் அனைத்து குற்றவாளிகளும் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!
வழக்கின் முக்கியத்துவம் கருதி ஜூன் 4ம் தேதி முதல் தினசரி விசாரிக்கப்படும் என நீதிபதிகள் அறிவிப்பு
விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை உறுதி செய்யக்கோரி சிபிஐ தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இதற்கிடையே குற்றவாளியான முன்னாள்...
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு...
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்
● புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நவீன சிகிச்சை அளித்து, நோயாளிகள் குணமடைய...
மாரடைப்பால் உயிர் இழந்த டிஎஸ்பி!
திண்டுக்கல் மாவட்டம்ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை பகுதிகளில் தேர்தல் பணியில் இருந்த டிஎஸ்பி ராமக்கிருஷ்ணன்(58 )இதய செயலிழப்பு காரணமாக உயிரிழப்பு. உயிரிழந்த ராமகிருஷ்ணன் ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவில் டிஎஸ்பி ஆக...















