Site icon News now Tamilnadu

புதுக்கோட்டையில் களப்பணியாளர்கள், காவல் துறையினர்,ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக பிரியாணியை புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ நிர்வாக இயக்குநரும் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார் மற்றும் அவரது புதல்வன் வெங்கட் ஜெயக்குமார் வழங்கினார்கள்..

புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ நிர்வாகம் சார்பில் அயராது மக்கள் பணி ஈடுபட்டு வரும் களப்பணியாளர்கள், காவல் துறை நண்பர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது..

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஊரடங்கால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் களப்பணியாளர்கள், காவல் துறையினர்,ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவாக பிரியாணியை புதுக்கோட்டை எஸ் வி எஸ் ஹீரோ நிர்வாக இயக்குநரும் தொழிலதிபர் எஸ்விஎஸ் ஜெயக்குமார் மற்றும் அவரது புதல்வன் வெங்கட் ஜெயக்குமார் வழங்கினார்கள்..

இந்த நிகழ்வில் ரோட்டரியன் ஜெய் பார்த்தீபன், சிவாஜி, ஜெகதீஷ், நெடுஞ்சாலை துறை அன்பு, ஆசிரியர் சிவகுமார், கூட்டுறவு வங்கி துணை மேலாளர் விக்னேஷ்வரன் உள்ளிட்ட நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர்..

Exit mobile version