சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் தலைமை செயலகத்திற்குள் செல்வோரை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும் காவல் ஆணையர் அமல்ராஜ் சுற்றறிக்கை!

3

காவல் ஆணையர் அமல்ராஜ் சுற்றறிக்கை

“தலைமை செயலகத்திற்குள் செல்வோரை தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்க வேண்டும். சட்டமன்றம் வருவோர் உரிய அனுமதி சீட்டு வைத்திருப்பதை உறுதி செய்க. விசாரணை கைதிகளை, காவல் நிலையத்தில் முன் அனுமதி இல்லாமல் வைக்க கூடாது. விசாரணை கைதிகளை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக் கூடாது. விசாரணையை விரைந்து முடித்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப வேண்டும். விசாரணை கைதி மதுபோதை, காயத்துடன் இருந்தால் மருத்துவமனையில் அனுமதியுங்கள்”

சட்டமன்ற கூட்டத்தொடர் – காவல் அதிகாரிகளுக்கு, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் சுற்றறிக்கை