தமிழகத்தின் மிகச்சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் கலைமாமணி விருது பெற்றவருமான முத்துக்கூத்தன் கலைவாணன் (68) உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் நேற்று காலமானார். புகழ்பெற்ற திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி ந.மா.முத்துக்கூத்தனின் மகனான இவர், அண்மைக்காலமாகப் புற்றுநோய் பாதிப்பிற்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவரது உயிர் பிரிந்தது. தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலையான பொம்மலாட்டத்தின் வழியே அறிவியல் பகுத்தறிவுக் கருத்துகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் தமிழ் மரபின் பெருமைகளைத் தனது தனித்துவமான பாணியில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த இவர், இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகளில் பொம்மலாட்ட நிகழ்சிகளை நடத்தியுள்ளார். சென்னை பொதிகை தொலைக்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், மக்கள் தொலைக்காட்சியில் “கலை மாமா” என்ற தலைப்பில் 90-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்த் தொலைக்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கிப் புகழ்பெற்ற இவர், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்காகப் பல நூறு பயிற்சி வகுப்புகளையும் நடத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, மூன்று திரைப்படங்கள் மற்றும் இரண்டு மெகா தொடர்களில் நடிகராக முகம் காட்டியுள்ள கலைவாணன், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான் போன்ற வெளிநாடுகளுக்கும் பயணித்துத் தனது பொம்மலாட்டக் கலை மூலம் சர்வதேச அளவில் தமிழ் மரபை நிலைநிறுத்திய பெருமைக்குரியவர் ஆவார்.
Home சுற்றுச்சூழல் தமிழகத்தின் மிகச்சிறந்த பொம்மலாட்டக் கலைஞரும் கலைமாமணி விருது பெற்றவருமான முத்துக்கூத்தன் கலைவாணன் (68) உடல்நலக் குறைவு...
- Advertisement -
Latest article
புதுக்கோட்டை அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் வீ. பழனிவேல் முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு...
இன்று நீக்கம் / இனைப்பு பற்றி லாட்டரி மாபியாவின் சோபாவில் அமர்ந்து திடீர் ஞானோதயம் பெற்று அறிக்கை வெளியிட்டுள்ள மாஜி மந்திரி விஜயபாஸ்கர் MLA அவர்களுக்கு புதுக்கோட்டைவடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு...
அஇஅதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்...
Dr C.Vijayabaskar’s Tweet 👇
உழைக்கும் உண்மைத் தொண்டர்களைஎதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையேகுற்றமாகப் பார்க்கும் அரசியலும்..
‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பதுஎத்தனை பேரை நீக்கினோம்என்பதை அல்ல…
எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்என்பதைத்தான்.
LeadershipMatters
https://x.com/i/status/2066429523961454834
மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்.. பாஜக மேலிடத்தையே கிறங்கடிக்கும் விஜய்!!
மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்.. பாஜக மேலிடத்தையே கிறங்கடிக்கும் விஜய்!!
தேசிய அரசியலிலும், தமிழக அரசியல் களத்திலும் தற்போதைய சூழலில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி...














