Site icon News now Tamilnadu

டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அமல்:

நாடு முழுவதும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

அதன்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள ஏ.டி.எம் மற்றும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரகளில் மட்டுமே உபயோகிக்க முடியும். வெளிநாடுகளில் பயன்படுத்த வங்கியில் அனுமதி பெற வேண்டும்.

பணம்பரிவர்த்தனை வரம்பை வாடிக்கையாளர்களே அமைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய சேவைகளை தேர்வு செய்வது, அல்லது விலகுவது, ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்பு இல்லாத பரிவர்த்தனைகளுக்கான வரம்புகள் உள்ளிட்டவற்றிற்கும் வாடிக்கையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

Exit mobile version