Site icon News now Tamilnadu

ஒரு கோடி பு ! புதுக்கோட்டை மாநகராட்சிக்கு அனுமதிக்காக ஓரு கோடி ரூபாய் அளித்தததாக கூறும் ஏர்டெல் பைபர் போடும் ஒப்பந்ததாரர்கள்! சேதம் அடைந்த சாலைகள் சமூக ஆர்வலர்கள் கேள்வியால் பரபரப்பு!

1 கோடி ருபாய் குடுத்து யாரிடம் அனுமதி வாங்கினார்கள்..???

புதுக்கோட்டை மாநகராட்சி பெரியார்நகரில் ஏர்டெல் க்காக துளை போடுவதை தடுத்து நிறுத்தப்பட்டது

மாநகராட்சியில் அனுமதி பெற்றதாக கூறி ஏர்டெல் பைபர் போடும் ஒப்பந்ததாரர்கள் அவர்களது இஷ்டத்திற்கு துளை போட்டு குடிநீர் பைப்புகளை சேதப்படுத்துகிறார்கள்

இதை கண்ட சமூக ஆர்வலரும், பெரியார் நகர் வார்டு கவுன்சிலர் பெரியார் நகர் சிவா தடுத்து நிறுத்தினார்..

அனுமதி வழங்கும் மாநகராட்சி அவர்களுக்கு குடி நீர் பைப் எங்கே செல்கிறது என்ற எந்தத் தகவலும் கூறாமல் அனுமதி வழங்குகிறார்கள்

ஆகையால் மாநகராட்சி பொறுப்பு எற்றால் மட்டுமே இந்த வேலையை செய்ய விடுவோம்

என்று பேசி போது

ஏர்டெல் பைபர் ஒப்பந்ததாரர்கள் தாங்கள் மாநகராட்சிக்கு ஒரு கோடி கொடுத்து அனுமதி பெற்று உள்ளோம் என்று பேசியது பேசுபொருளாகியுள்ளது..

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாநகராட்சியிடம் சரியான தகவல்கள் எதுவும் வருமா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

Exit mobile version