புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் விதைக்கலாம் அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா புதுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் திரு வை. முத்துராஜா அவர்கள் கலந்துகொண்டு விதைக்கலாம் அமைப்பிற்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு கொடைச் செம்மல் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் சாமி. சத்தியமூர்த்தி அவர்கள் சமூக சேவை அமைப்புகளுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் மரக்கன்றுகளை நல்ல முறையில் வளர்த்தவர்களுக்கு இயற்கை காவலர் விருது வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் ஐடியா பிளஸ் நிறுவனர் திரு. கிருஷ்ண வரதராஜன் அவர்கள் சிறப்புரை ஆற்றி அமைப்பிற்கு ரூபாய் 50 ஆயிரம் நிதியுதவி அளித்தார். நிகழ்வில் கிராமிய இசை பாடல்கள் செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி தம்பதியினர், மூத்த வழக்கறிஞர் திரு. சொக்கலிங்கம், கவிஞர் மூ.கீதா, விதைக்கலாம் அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு நாகபாலாஜி அவர்கள் நன்றி கூறினார்
Home சுற்றுச்சூழல் புதுக்கோட்டை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வரும் “விதைக்கலாம்” அமைப்பின் 7ஆம் ஆண்டு துவக்க விழா...
- Advertisement -
Latest article
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஊரில் இயற்கை வளங்களை சின்னாபின்னமாக்கிய கல்குவாரி அதிபர்கள்! அரசு விதித்துள்ள விதிமுறைகளை காற்றில்...
இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ஊரில் இயற்கை வளங்களை சின்னாபின்னமாக்கிய கல்குவாரி அதிபர்கள்! அரசு விதித்துள்ள விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு கல்குவாரி அதிபர்களுக்கு துணை போகும் புவியியல் துறை, வருவாய்த் துறை...
தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம். வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!
தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம்!
வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!
2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு...
மதுரைக்கு மல்லிகைப்பூ, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பது போல புதுக்கோட்டைக்கு மணல் கொள்ளையா? துணை போகும் அரசு...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை, புனங்குளம், அரியானிப்பட்டி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக 20 ஏக்கருக்கு மேலாக 50 அடி ஆழத்தில் பட்டப் பகலிலேயே கனிமவள கொள்ளை - கண்டுகொள்ளாத அதிகாரிகள் - நடவடிக்கை எடுக்க...















