சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முக்கிய நபர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இந்த சூழலில் நடிகை மீனாவின் கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத்தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தநிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மீனாவின் கணவர் வித்யாசாகர், தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவருக்கும் மீனாவுக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடந்தது, இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். நடிகை மீனாவின் கணவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- Advertisement -
Latest article
தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம். வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!
தென் தமிழகத்தில் ஆரம்பித்த 2026 சட்டமன்ற தேர்தல் ஜுரம்!
வாக்காளர்கள் கவர பொங்கல் பரிசுகள் யுக்தி!
2026ஆம் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி கொண்டாட்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு...
மதுரைக்கு மல்லிகைப்பூ, மணப்பாறைக்கு முறுக்கு, திருநெல்வேலிக்கு அல்வா என்பது போல புதுக்கோட்டைக்கு மணல் கொள்ளையா? துணை போகும் அரசு...
புதுக்கோட்டை மாவட்டம் கந்தவர்கோட்டை, புனங்குளம், அரியானிப்பட்டி கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக 20 ஏக்கருக்கு மேலாக 50 அடி ஆழத்தில் பட்டப் பகலிலேயே கனிமவள கொள்ளை - கண்டுகொள்ளாத அதிகாரிகள் - நடவடிக்கை எடுக்க...
விராலிமலை அருகே நடந்த விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி செய்த முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர்!
விராலிமலை, ஜன-02
விராலிமலையில் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதல் 15 தொழிலாளர்கள் காயம்
டாக்டர் பற்றாக்குறை என்றால் என்ன நானும் ஒரு மருத்துவர் தான் என்று கூறிக்கொண்டு விபத்தில் சிக்கிய தொழிலாளிகளை மீட்டு முதலுதவி...















