தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் அல்லாதவர்களும் விண்ணப்பித்து உதவித்தொகையை பெற்று வருவதாக புகார் எழுந்தது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி, விவசாயிகள் அல்லாதவர்கள் பெற்ற நிதியுதவியை திரும்ப வசூலித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து இருக்கிறதா? என வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் அடங்கிய குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று விசாரணை நடத்தினர். அதில் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. முறைகேடாக நிதியுதவி பெற்றவர்களின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கூறும்போது, பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதா? என கண்டறிய வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முறைகேடாக நிதியுதவி பெற்றுள்ளனர். அதாவது ரூ.1 கோடியே 20 லட்சம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்த பணம் திரும்ப வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.67 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் வசூலிக்கப்படும். தவறு செய்ததாக ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தவறு யார் செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- Advertisement -
Latest article
புதுக்கோட்டை அஇஅதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் வீ. பழனிவேல் முன்னாள் அமைச்சர், விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.விஜயபாஸ்கருக்கு...
இன்று நீக்கம் / இனைப்பு பற்றி லாட்டரி மாபியாவின் சோபாவில் அமர்ந்து திடீர் ஞானோதயம் பெற்று அறிக்கை வெளியிட்டுள்ள மாஜி மந்திரி விஜயபாஸ்கர் MLA அவர்களுக்கு புதுக்கோட்டைவடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு...
அஇஅதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த அஇஅதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்...
Dr C.Vijayabaskar’s Tweet 👇
உழைக்கும் உண்மைத் தொண்டர்களைஎதிரிகளாகப் பார்க்கும் தலைமையும்,
கேள்வி கேட்பதையேகுற்றமாகப் பார்க்கும் அரசியலும்..
‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பதுஎத்தனை பேரை நீக்கினோம்என்பதை அல்ல…
எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்,எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்என்பதைத்தான்.
LeadershipMatters
https://x.com/i/status/2066429523961454834
மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்.. பாஜக மேலிடத்தையே கிறங்கடிக்கும் விஜய்!!
மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன்.. பாஜக மேலிடத்தையே கிறங்கடிக்கும் விஜய்!!
தேசிய அரசியலிலும், தமிழக அரசியல் களத்திலும் தற்போதைய சூழலில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி...














