தஞ்சாவூர்: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதத்திற்கு ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இந்த நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது. இதில் விவசாயிகள் அல்லாதவர்களும் விண்ணப்பித்து உதவித்தொகையை பெற்று வருவதாக புகார் எழுந்தது. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தி, விவசாயிகள் அல்லாதவர்கள் பெற்ற நிதியுதவியை திரும்ப வசூலித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து இருக்கிறதா? என வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் அடங்கிய குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று விசாரணை நடத்தினர். அதில் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பது தெரிய வந்தது. முறைகேடாக நிதியுதவி பெற்றவர்களின் வங்கி கணக்கு கள் முடக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கூறும்போது, பிரதமரின் நிதியுதவி திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதா? என கண்டறிய வருவாய்த்துறையினர், வேளாண்மைத்துறையினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முறைகேடாக நிதியுதவி பெற்றுள்ளனர். அதாவது ரூ.1 கோடியே 20 லட்சம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்த பணம் திரும்ப வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.67 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையையும் வசூலிக்கப்படும். தவறு செய்ததாக ஒப்பந்த பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தவறு யார் செய்து இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- Advertisement -
Latest article
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
சென்னை, இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு...
தேசிய குத்துச் சண்டை போட்டிக்கு தேர்வான வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாழ்த்து,..
ஜூன் 18 19 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான இளையோர் குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனைகள் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளனர் மற்றும்,
மாநில அளவில் முதலாவது இடத்தையும்...
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்!
3 கிராம் தங்கமோதிரத்தை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த புதுக்கோட்டை மாவட்ட கந்தர்வகோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை செட்டிக்காடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் தவறவிட்ட 3 கிராம் தங்க...