ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

486

ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி; இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

காளையர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டிக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டிக்கு இரு தினங்களுக்கு முன்பு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை.

காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்தில் இருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை ஒரு நாளுக்கு முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும்- தமிழக அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here