கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை: இதில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு என தகவல்…

825

சென்னை: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து, முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில், இன்று அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்குவது; பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துவது; தடுப்பூசி கொள்முதலை அதிகமாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. பரவல் அதிகமானால், ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேர ஊரடங்கு அறிவிப்பது குறித்தும், ஆலோசனையில் முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here