கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் தகராறு; மனமுடைந்த நிறைமாத கர்ப்பிணி மனைவி தற்கொலை!!

338

குத்தாலம் அருகே கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து நிறைமாத கர்ப்பிணியான மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்(32). லாரி டிரைவர் இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு வயதில் மகள் உள்ளார். தற்போது சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிலம்பரசன் ரூ.16 ஆயிரத்திற்கு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அறிந்த சூர்யா வருமானத்திற்கு மீறி செல்போன் தேவையா என கேட்டதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபித்துக்கொண்டு சூர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை அவரது தாயார் அம்சவல்லி சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
மேலும் சிலம்பரசன் சூர்யா தம்பதியினருக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். குடும்பத் தகராறில் நிறைமாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here