சென்னை: அரியர் தேர்ச்சி விவகாரத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார். AICTE எந்த மின்னஞ்சலும் அனுப்பவில்லை என அமைச்சர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். சூரப்பாவின் கருத்தை, AICTE கருத்தாக திணிக்கப் பார்ப்பது கண்டிக்கத்த்க்கது என்று அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார். மின்னஞ்சல் வந்திருப்பின் அதனை சூரப்பா வெளியிட வேண்டும் என்று அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.